முடக்கப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வு கடந்த ஜனவரி 18ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் இதுவரையில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற அலுவலர்களுக்கும் கொவிட் தொற்றியுள்ளது.
இந்தநிலையில் பாராளுமன்ற அமர்வு நாட்களை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது.
இதுதொடர்பான தீர்மானம் நாளையதினம் 3 மணிக்கு பாராளுமன்ற விவகாரங்கள் குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தவாரம் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் பாராளுமன்ற அமர்வினை நடத்துவதற்கு உத்திதேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
