ஒமிக்ரொன் திரிபு நாடுமுழுவதும் பரவி வருகின்ற நிலையில், நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையும் 1000ஐ கடந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் மீண்டும் லொக்டவுன் அல்லது நாடு முடக்கத்தை அமுலாக்குவதா? என்பது குறித்து ஆராயப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, ஒருகாலும் மீண்டும் நாடு முடக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
எனினும் சில வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
