நேற்றுபோல் இன்று மின் தடை அமுலாகாமல் இருக்காது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, A , B , C ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது .
இந்த வலயங்களில் காலை 8.30 முதல், மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், பின்னர் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மேலும் 2 மணி நேரமும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது .
அதேநேரம் , P , Q , R , S , T , U , V , W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில் , 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது .
இந்த வலயங்களில் காலை 8.30 முதல் , மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் பின்னர் மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் மீதமுள்ள மணி நேரமும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
