கொவிட் 19 நோய் காரணமாக 12 வயதான சிறுமி ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, ரிட்ஜே சீமாட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய கூறினார்.
குறித்த சிறுமி அதீத நியுமோனியா காய்ச்சலால் உயிரிழந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சிறுமி அதிக உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் சேகரிக்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.
