அமெரிக்காவின் முன்னாள் செனட்டர் பொப் கெரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகராகவும் இருந்தார்.
இரு நாடுகளிலும் தாக்கம் செலுத்தும் பல பொதுவான விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
