IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் பானுகா ராஜபக்ஷ பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 50 லட்சம் இந்திய ரூபாய் விலை நிர்ணயமானது.
பெங்களூரில் நடைபெற்றுவரும் 15ஆவது IPL தொடருக்கான ஏலத்தில், இதுவரையில் 5 இலங்கை வீரர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
- வனிந்து ஹஸரங்க – றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – 10.75 கோடி இந்திய ரூபா.
- துஷ்மந்த சமீர – லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி – 2 கோடி இந்திய ரூபா.
- மஹீஷ் தீக்ஷன – சென்னை சுப்பர் கிங்ஸ் – 70 லட்சம் இந்திய ரூபாய்கள்.
- சாமிக்க கருணாரத்ன – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 50 லட்சம் இந்திய ரூபாய்கள்.
- பானுக ராஜபக்ஷ – பஞ்சாப் கிங்ஸ் அணி – 50 லட்சம் இந்திய ரூபாய்.
