IMF உடன் இணைந்து செயற்பட தீர்மானம் | ஜனாதிபதி விசேட அறிவிப்பு

4 years ago
Sri Lanka
(388 views)
aivarree.com

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேசத்துக்கான தமது விசேட உரையில் இதனை அறிவித்துள்ளார்.

அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் போது வருடாந்தம் செலுத்தப்பட வேண்டிய கடன் கொடுப்பனவுகள் சம்பந்தமாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த கடன் கொடுப்பனவுகளை செலுத்தும் முறைமை சம்பந்தமாக அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசத்துக்கான உரை சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter