சர்வதேச நாணய நிதியத்தின் குழு (IMF) ஒன்று திங்கட்கிழமை (14) இலங்கைக்கு விஜயம் செய்கிறது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இலங்கையில் தங்கி இருக்கும் IMF குழுவின் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதன்போது இலங்கையின் நிதிநிலைமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் குறித்து விளக்கப்படுத்தவுள்ளனர்.
திங்கட் கிழமை அவர்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவையும், செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
