47 வருடங்களுக்கு பின் சாதனை படைத்த ஊடகவியலாளரின் மகள்

4 years ago
Sri Lanka
(305 views)
aivarree.com

முல்லைத்தீவு பனிக்கன்குளம் தமிழ் வித்தியாலயத்தின் மாணவியான தவசீலன் புவநயனி, 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

அந்த பாடசாலையில் 1975ம் ஆண்டுக்குப் பின்னர், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் முதல் மாணவி அவராவார்.

கடந்த 27 வருடங்களாக அங்கு யாரும் சித்தியடையவில்லை.

புவநயனி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான தவசீலனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.