வீதியில் இறங்குவதை விட மக்களுக்கு வேறு வழியில்லை | மைத்ரிபால

4 years ago
Sri Lanka
(214 views)
aivarree.com

வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.


எண்ணெய் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.


கொழும்பு நகர்ப்புற வகுப்பினரும் மின்சாரம் மற்றும் எரிவாயு இன்றி பட்டினியில் உள்ளனர். 


எண்ணெய், எரிவாயு, மின்சாரம் இன்றி உணவுப் பற்றாக்குறையால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.


பாரியளவிலான போராட்டங்கள் நடத்தப்படுவதுடன், நாடு முழுவதும் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளது, என்றார்.