வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74வது சுதந்திரதின விழா இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் பலர் 1 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டனர்.
இதனால் மயக்கமுற்ற 13 மாணவிகளும் 5 சிவில் பாதுகாப்பு சேவையாளர்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும் சிகிச்சையின் பின்னர் அவர்கள் நலமாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
