வெல்லவாய, எல்லேவளை நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மாத்தறையில் இருந்து சென்ற குறித்த மூவரும் உயிரிழந்த நிலையில் பிரதேச மக்களும் காவல்துறையினரும் இணைந்து சடலங்களை மீட்டனர்.
இதேவேளை நேற்று ரக்கனாவ நீர்வீழ்ச்சிக்கு சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
