ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று மாலை கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழு கூடவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளரான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிக்கும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெறுகிறது.
