சிறார்கள் மத்தியில் புற்று நோய் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபாலி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் வருடாந்தம் 500 பேர் இனம்காணப்பட்ட நிலையில் தற்போது 750 பேர் இனம் காணப்படுகின்றனர்.
இதனை உரிய நேரத்தில் இனம்கண்டு குணப்படுத்த முடிந்த போதிலும் பெற்றோர்கள் மாற்று சிகிச்சை முறைகளை கையாண்டு குழப்பிக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 வயதுக்கு மேற்பட்ட புற்று நோயாளர்களில் அதிகமானோர் மார்பக புற்றால் பாதிக்கப்படுவதாக தெரியந்துள்ளது.
இன்று உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
