கொவிட் நோயாளர்களுக்கு 7 நாட்களில் விடுதலை/ இலங்கையில் புதிய நடைமுறை

4 years ago
(49 views)
aivarree.com

வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்கள், தொற்றுறுதியாகி ஏழு நாட்களின் பின்னர், நோய் அறிகுறி இல்லையாயின், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படலாம் – சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 7 நாட்களுக்குள், இறுதி 48 மணிநேரம் எந்த மருந்தையும் அருந்தாமல் காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், அவர்கள் பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கொவிட் தொற்றுக்குள்ளானோரின் முதலாவது தொடர்பாளர்களுக்கு அறிகுறி இல்லை எனின், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

அறிகுறிகள் இருந்தால் பி.சி.ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனை செய்ய வேண்டும்.

வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள், கொவிட்-19 தொற்றுக்கான வைத்தியசாலை செலவு உட்பட, ஆகக் குறைந்தது 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான காப்புறுதியைக் கொண்டிருக்க வேண்டும்.

அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் உட்பட, மேலதிக 14 நாட்கள் காலம், அந்தக் காப்புறுதியில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், கொவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவர்.

12 முதல் 18 வயதுக்குட்பட்ட, ஒரே ஒரு பைஸர் தடுப்பூசி செலுத்தியுள்ள சிறுவர்கள், தமது பெற்றோருடன் வெளியில் செல்ல முடியும்.

மேலும் பாடசாலையில் ஒரு வகுப்பில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அந்த மாணவரிடம் இருந்து ஒரு மீற்றருக்கு அப்பால் அமர்ந்திருந்த மாணவர் முகக்கவசம் அணிந்திருப்பாராக இருந்தால், அவரை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.