காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படுகின்ற கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
காதலர் தினமான இன்று ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பாக காண்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
