நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு இந்தியா 1.9 பில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு இணங்கி இருந்தது.
இதன்படி 900 மில்லியன் டொலர்கள் கடன் எல்லை வசதியாக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 1 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பசில் இந்தியா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இந்தியா சென்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
