நீர் கட்டணம் செலுத்தாதோருக்கான அவசர அறிவிப்பு

4 years ago
Sri Lanka
(126 views)
aivarree.com

6 மாதங்களுக்கு மேல் நிலுவைத் தொகையை மீதம் வைத்திருப்போரின் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

நீர் நிலுவைக் கட்டணமாக 7.5 பில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது.

இதனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 6 – 12 மாதங்கள் வரையில் நிலுவைக் கட்டணத்தை செலுத்தாதுள்ள வாடிக்கையாளர்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter