இந்த ஆண்டு நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் என்ன பிரச்சினை வந்தாலும் நடத்தப்படும் என்று அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
நுவரெலியாவில் கிரிக்கட் தொடர் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொவிட் காரணமாக சரியான முறையில் வசந்தகால நிகழ்வுகளை நடத்த முடியாது போய் இருந்தது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அதனை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவது காவல்துறையினரின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார்.
