சந்தையில் ஒரு மூடை சீமெந்து 2 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
விலை குறிப்பிடப்படாத சீமெந்து மூடைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் வர்த்தகர்கள் தன்னிச்சையாக விலை நிர்ணயித்து சீமெந்தினை விற்பனை செய்கின்றனர்.
இந்தவிடயம் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சில வர்த்தகர்கள் சீமெந்தினை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
