சப்ரகமுவ மாகாணம், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வியாழக்கிழமை(10) மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை பெய்யாது எனவும், கிழக்குக் கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யும் எனவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
