பதுளை – ஹாலி-எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை மாணவி ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான குறித்த மாணவி பாடசாலையிலிருந்து உடுவரை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக நிலவிய பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்தவரை கைது செய்வதற்கான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்
WhatsApp Group >>
