பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான திருத்த வரைவுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிருப்தி தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் அரசாங்கத் தரப்பில் மிகக்குறைவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் சட்ட மூலமானது நீதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது.
இவற்றை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
