சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தரவிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

7 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுமார் 4 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த நீண்ட விசாரணை மற்றும் வாக்குமூலப் பதிவின் பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.