உலகில் கொரோனா தொற்று பரவி இருக்காத நாடுகளில் டொங்காவும் ஒன்றாக இருந்தது.
ஆனால் அங்கு நேற்று 2 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக முடக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் வெளிநாடுகளிலிருந்து அந்தநாட்டுக்கு பாரிய அளவில் நிவாரணங்கள் அனுப்பப்பட்டன. அதன் ஊடாகவே அங்கு கொவிட் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
