இலங்கை நிதியுதவி கோரும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராய்வதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜெர்ரி ரைஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவினர் அறிக்கையை நிறைவு செய்த பின்னர் அது தொடர்பில் கலந்துரையாடப்படும்.
இலங்கை அரசாங்கம் இதுவரையில் நிதி உதவி கோரிக்கை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
