இந்தியாவிலும் ஜப்பானிலும் நில அதிர்வு | ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

4 years ago
World
(123 views)
aivarree.com

ஜப்பான் – புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணியளவில் (இலங்கை நேரப்படி 8.06 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் 7.3 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் சிறி நகரில் இருந்து வடக்காக 119 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பு விபரங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.

Reported by
Editorial Reporter