உலக வங்கி 150 மில்லியன் டொலர் உதவி வழங்க ஒப்புதல்

2 months ago
Sri Lanka
(55 views)
aivarree.com

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மையப்படுத்திய சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆதரவாக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 45 பில்லியன் இலங்கை ரூபாய்) வழங்குவதற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிதியுதவி இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.