38 வயதில் உ/த பரீட்சை எழுதும் LTTE சந்தேகநபர்

4 years ago
Sri Lanka
(58 views)
aivarree.com

கைதிகள் மூவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் மற்றும் விடுதலைப் புலிகள் விசேட சந்தேக நபர் ஒருவரும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமரவுள்ளனர்.

Reported by
Editorial Reporter