இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி52 ரொக்கெட்டை திங்கள் அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
இதன் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் செட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவன் விண்வெளி தளத்தில் இருந்து இவை செலுத்தப்பட்டன.
விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
புவியை கண்காணிக்கவுள்ள இந்த செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் மொத்தம் 10 ஆண்டுகள் ஆகும்.
