மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணம் – புத்தூரில் 2 பேர் பலியாகினர்.
59 வயதான மாசிலாமணி குகபிரகாசம், 55 வயதான சிவபிரகாசம் சுகுனா ஆகிய தம்பதியினரே சம்பவத்தில் பலியானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அச்சுவெலி காவல்துறையினர் அய்வரி செய்திகளுக்கு உறுதிபடுத்தினர்.
Update-1 நீர் பம்பிக்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் இருந்து கிணற்று நீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில், மனைவி அதில் சிக்குண்டார்.
மனைவியை காப்பாற்ற சென்ற போது, கணவனும் மின்சாரம் தாக்கி பலியானார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
