இலங்கையில் செவ்வாய்கிழமை மேலும் 36 பேர் கொவிட் தொற்றால் மரணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட் நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,692 ஆக அதிகரித்துள்ளது.
