நாட்டில் மின்சாரத் தடை அமுலாக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது எந்த பொறிமுறையில் இடம்பெறும் என செவ்வாய்கிழமை (15) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்து வந்தது.
எனினும் தற்போது இதனை தவிர்க்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
