மின்சார நெருக்கடி /பசிலின் நூதன நடவடிக்கை

4 years ago
Sri Lanka
(102 views)
aivarree.com

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்கப் பெறாததன் காரணமாக நாடெங்கிலும் மின்சார நெருக்கடி நிலவுகிறது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் வீதி விளக்குகளை ஒளிரவிட வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கான கட்டளையை பிறப்பிக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களிடம் நிதி அமைச்சர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.