பொருளாதார பிரச்சினைக்கு புறவிடயங்களே காரணமாம் | பசில்

4 years ago
Sri Lanka
(110 views)
aivarree.com

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு புறக்காரணிகளே காரணம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல், உக்ரைன் யுத்தம், எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களாலேயே நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த விடயங்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் உள்நாட்டில் கட்டுப்படுத்தக்கூடிய விடயங்களை கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்படும் என பசில் கூறினார்.