நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.
இந்தியாவில் அவர்கள் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, இலங்கைக்கான கடன் உதவிகளை பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புகொண்ட 1.9 பில்லியன் டொலர் கடனுதவியில் 900 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
1 பில்லியன் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அங்கு செல்கின்றனர்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவின் மனைவியும், அவருடன் சென்றிருப்பதாக விமான தெரிவிக்கப்பட்டுள்ளது.
