கொவிட் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளனர்;
சுகாதார வழிகாட்டி ஒன்று இருக்கிறதே தவிர, அது அரச மற்றும் தனியார்த்துறையினரால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
மக்கள் இந்த விடயத்தில் இருக்கின்ற அபாய நிலையைப் புரிந்து கொள்ளவில்லை.
மாஸ்க் அணிவதைத் தவிர வேறு எந்த சுகாதார வழிகாட்டல்களும் பின்பற்றப்படுவதில்லை.
இந்த நிலை நீடித்தால் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே எச்சரித்துள்ளார்.
