தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் அண்மையில் அனுமதி பெறாமல் மரம் வெட்டியபோது, விபத்துக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகி இருந்தனர்.
அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் மரணத்துக்கு காரணமான சம்பவத்துக்கு நீதிகோரி லோகி தோட்ட மக்கள் திங்கள் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

