கொழும்பு செட்டியார் தெரு தங்க விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போது 24 கரட் நகைத்தங்கம் ஒரு பவுன் 131,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரேநாளில் 4000 ரூபா அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கம் 120,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா மோதல் மற்றும் தங்கத்துக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
