டொலர் தட்டுப்பாடுக்கு மத்தியில் டொலரை வெளியேற்ற உதவிய சுங்க அதிகாரி

5 years ago
tamilnewsline.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 79,200 அமெரிக்க டொலர்களை (1.5 பில்லியன் ரூபா) வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி ஒருவர் காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தியுள்ளதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter