சாரதி அனுமதி அட்டை வழங்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடக்கக் காலத்தில் மூடப்பட்டிருந்ததால், பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அனைத்தையும் ஒரே தடவையில் முகாமை செய்வது சிரமம் என்பதால், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 2022 ஏப்ரல் 1 தொடக்கம் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதி அட்டைகளின் செல்லுபடி காலம், காலாவதி ஆகும் தினத்திலிருந்து 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் அனுமதி அட்டைகளின் காலம், காலாவதி தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
-மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்.
