இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், இலங்கைக்கு எதிரான 20/20 கிரிக்கட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தொடையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தீபக் சாஹர் குழாமில் இருந்து விலகி இருப்பதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
குழாமில் ஏற்கனவே ஜஸ்ப்ரிட் பும்ரா இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக யாரும் பிரதியீடு செய்யப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தீபக் IPL போட்டிகளில் விளையாட முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
