இலங்கை – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி இடம்பெறும் சிட்னி மைதானத்துக்கு அருகில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடிகளை ஏந்தியவாறு அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் பேரவையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“இனப்படுகொலையை கிரிக்கட்டால் மறைக்க அனுமதிக்க வேண்டாம்” என்றவாறான பதாகைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

