இன்று இரவு 9.30 வரையில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் 1 மணிநேர மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரு நவமணி இதனை அய்வரிசெய்திகளுக்கு உறுதிப்படுத்தினார்.
நாட்டின் வெவ்வேறு பாகங்களில் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.
கடந்த வாரத்தைக்காட்டிலும் இந்த வாரம் மின்சாரத்துக்கான கேள்விஅதிகரித்தமை மற்றும் நுரைச்சோலையில் மின் பிறப்பாக்கிப் பழுதடைந்தமைஎன்பன இதற்கான காரணங்களாகும், என்று அவர் கூறினார்.
ஆனால் மின்சாரத்தைத் துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதிவழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
