தேசிய மின்சார கேள்வி குறைந்த மட்டத்தில் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன் அறிவிப்பின்றி மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அனுமதியின்றி மின் துண்டிக்கப்பட்டமைக்கு எதிராக மின்சார சபை மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
