கதிர்வீச்சு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உக்ரைனின் அணு மின்மையம் அமைந்துள்ள உலகிலேயே ஆபத்தான இடம் என கருதப்படும் செர்னோபில் பகுதியை ரஷ்ய படை கைப்பற்றியது.
இதனை அடுத்து அங்கு திடீரென கதிர்வீச்சு மட்டம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
ரஷ்யா வேண்டுமென்றே கதிர்வீச்சு மட்டத்தை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அங்கு அணு கதிர்வீச்சு அதிகரிக்குமாக இருந்தால், ஜப்பான் – யுரோசிமா, நாகாசாக்கியில் ஏற்பட்ட பாதிப்பைப் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
