தாதியர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

4 years ago
Sri Lanka
(119 views)
aivarree.com

நோயாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்க தாதி உத்தியோகஸ்தர்கள் சங்கத்துக்குக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த தடை உத்தரவு இந்த மாதம் 24ம் திகதி வரை அமலில் இருக்கும்.

தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையினால் அரசாங்க வைத்தியசாலைகளுக்குப் பிரவேசிக்கும் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


இதுதொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையக் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண அலுத்கே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

அரச தாதி உத்தியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.