எரிபொருள் விலையை கூட்டும் முயற்சி?

5 years ago
Sri Lanka
(158 views)
aivarree.com

எரிபொருள் விலையில் மீண்டும் அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு கூறினார்.

நாளாந்தம் பெற்றல் மற்றும் டீசலால் லீட்டருக்கு முறையே 36 ரூபா மற்றும் 8 ரூபா படி நட்டம் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக அய்வரியிடம் கருத்து தெரிவித்த. குறித்த பெயர் கூற விரும்பாத அதிகாரி, பெற்றல் விலையை கூட்டுவது சம்மந்தமாக ஆலோசிப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக வலுசக்தி அமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

Reported by
Editorial Reporter