உக்ரைனில் யுத்தம் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், அங்கிருந்து இதுவரையில் 32 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உக்ரைன் எல்லை நாடுகள் ஊடாக அவர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக, உக்ரைன் நிலைமைகளை கண்காணிக்கும் துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 30 இலங்கையர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் அவர்களை வெளியெற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
