அமைச்சரவையில் இந்தமாதம் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாமதித்துள்ளார்.
அரசில் பங்காளியாக இருக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசிலிருந்து பிரிகின்றமையே இதற்கான காரணம் என அறியக்கிடைக்கிறது.
மைத்திரி விரைவில் தமது புதிய கூட்டணியை அறிவிக்கவுள்ள நிலையில், விரைவில் சுதந்திர கட்சி அரசிலிருந்து வெளியேறும்.
ஆனால் சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் அரசுடனேயே நிலைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
